முதல் கோணல் முற்றிலும் கோணல் மக்கள் அதிர்ச்சிக்கு விடை தருவாரா விஜய் தம்பி

சட்டசபையில்மௌன விரதமும், டெல்லியில் மௌன விரதமும், மக்கள் பிரச்சனைகளுக்கு தொடர் மௌன விரதமும் ,சட்டசபையில் துறை சார்ந்த அமைச்சர்கள் காட்டுகிற மௌனமும், மொத்தத்திலே நடப்பது த.வே.க அரசா? மௌன அரசா என்பதுதான் தமிழ்நாட்டு மக்களுடைய கேள்வி

முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கேள்வி

மதுரை

சனிக்கிழமை ஆனா தமிழ்நாட்டுல ஒரே பரபரப்பு ஏன்னா த.வே.க அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சி தமிழ்நாட்டின் முன்னேற்றம் ,தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு, தமிழ்நாட்டினுடைய போதை பொருள் நடமாட்டம் ,தொடர் மின்வெட்டு, டெல்டா குழுவை சாகுபடியினால் ஏற்பட்டிருக்கிற வறட்சி, பயிர் கடன் தள்ளுபடி, தேர்தல் வாக்குறுதி, தொலைநோக்கு திட்டம் குறித்தெல்லாம் மொத்தத்தில வருங்கால தமிழகம் வளமையான தமிழகம் ஆக்க கடுமையான ரீல்ஸ் வியூகம் வகுத்து அனுபவம், அறிமுகம், ஆற்றல், அறிவு அதோடு இருக்கின்ற நிலையிலே அந்த நம்பிக்கை இழந்த அரசியல் ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க ஆள் பிடிக்கிற வேலையை அட்டகாசமாக செய்து அதிரடி காட்டி வருகிறது நமது விஜய் தம்பியின் த.வே.க அரசு

வாசல் தேடி வருகின்ற அரசியல் ஆதரவற்றோர்களுக்கு மானமுள்ள மரியாதை உள்ள வரவேற்பு மட்டும் யாரும் எதிர்பார்க்கக் கூடாது இங்கு வேலையும் காலி இல்ல , உங்கள் ஆற்றலும் தேவையில்லை

இருந்தாலும் வாசல் படி வரை வந்துவிட்டால் உங்க எதிர்காலத்திற்கும் நாங்க கேரண்டி இல்ல ஏன்னா த.வே.க கட்சிக்கே எதிர்காலம் இல்லை.

ஏன்னா இன்றைக்கு யானைக்கும் அடி சறுக்கும் அதை நினைவில் வைத்து ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல விஜய் தம்பி அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் மேதகு ஆளுநர் உரையோடு வாசித்து தொடங்கப்பட்டது .அள்ள,அள்ள குறையாக அட்சய பாத்திரம் அப்பப்பா அத்தனையும் தேன் கலந்த வார்த்தை, குற்றால அருவி போல சட்ட சபையிலே இன்றைக்கு குற்றால அருவி வந்தது போல தேன் கலந்த வார்த்தைகளுக்கு குறையேதும் இல்லை?

அதோடு சல, சலசென அல்வா அறிவிப்புகளோடு குற்றால அருவியே சட்டசபைக்கு வந்ததைப் போன்ற ஒரு கதை ,திரைக்கதை ,வசனம் ,இயக்கம், சென்டிமென்ட் காட்சி, காமெடி, கலாட்டா என எல்லாமே சூப்பர் விஜய் அண்ணா சூப்பரா இருக்குது ஆனா உங்க இந்த ரீல்ஸ் படம் சூப்பர் டூப்பராக போய்விடுமோ அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது ?

இன்றைக்கு நீங்கள் சட்டசபையில் இருக்கிற மௌன விரதமும், டெல்லியில் போய் நீங்கள் காட்டுகிற மௌன விரதமும், மக்கள் பிரச்சனைகளுக்கு தொடர் மௌன விரதமும் ,சட்டசபையில் எழுப்பிய கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் காட்டுகிற மௌனமும், மொத்தத்திலே நடப்பது த.வே.க அரசா மௌன அரசா என்பதுதான் தமிழ்நாட்டு மக்களுடைய கேள்வி

த.வே.க அரசின் மௌன புரட்சிக்கு மக்கள் புரட்சி எப்போது வரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். உதயகுமார் ஒரு மாத காலத்திலே என்ன நடத்திவிட முடியும் என்று எல்லோரும் கேட்பது எனக்கும் தெரியும்.

ஆனால் ஐந்தில் வளையாது 50 வளையாது போல முதல் கோனல் முற்றிலும்கோனல் போல போய்விடுமோ என்கிற கவலையிலே தான் நான் இந்த கருத்தை முன்வைக்கின்றேன். .

இதிலே அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை, அரசியல் எதிரி என்கின்ற கலப்படம் இல்லை ,தூய எண்ணத்தோடு மக்கள் மீது அக்கறையில் தான் சொல்கிறேன்

முதல் கோணல் முற்றும் கோணலாக முடிந்து விடுமோ என்கிற கவலையிலே தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த மௌன புரட்சிக்கு முடிவுரை வருமா இதனால் மக்கள் புரட்சி ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *